Sorting by

×

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் மே 21-ஆம் தேதி கூடுகிறது.

புதுதில்லியில் மே 21-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், தமிழ்நாட்டுக்கு அதிகளவில் தண்ணீர் திறந்துவிட பரிந்துரைக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

கடந்த மாதம் 30-ம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், காவிரியிலிருந்து மே மாதம் தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி. நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அடுத்தகட்டமாக, மே 16-ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *