புது தில்லி: முந்தைய காங்கிரஸ் அரசு இஸ்லாமியர்களுக்கு மொத்த நிதிநிலை அறிக்கையில் 15 சதவீதத்தை ஒதுக்க விரும்பியதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியிருப்பது கூறியது முற்றிலும் தவறானது, மூர்க்கத்தனமானது மற்றும் வினோதமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
மத்திய அரசின் மொத்த பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கு 15 சதவீத நிதியை ஒதுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது; பட்ஜெட்டாக இருந்தாலும், இடஒதுக்கீடாக இருந்தாலும் மத அடிப்படையில் பிரிக்கப்பட ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மக்களவைத் தோ்தலையொட்டி, மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்று பேசிய மோடி, மத்தியில் கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அரசின் மொத்த நிதிநிலை அறிக்கையில் 15 சதவீத நிதியை தங்களின் விருப்பத்துக்குரிய வாக்கு வங்கியான இஸ்லாமியர்களுக்கு செலவழிக்க அந்த கட்சி திட்டமிட்டது. இந்த திட்டத்தை காங்கிரஸ் முன்மொழிந்தபோது, நான் குஜராத் முதல்வராக இருந்தேன்.
Hon’ble Prime Minister’s statements are increasingly bizarre and show that his speech writers have lost their balance
Yesterday, he claimed that if he played the Hindu-Muslim divide, he would not be fit to be in public life
Today, he played his usual game of dividing Hindus and…
— P. Chidambaram (@PChidambaram_IN) May 16, 2024
பாஜக தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டதால், அவா்களால் திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை. அதே திட்டத்தை மீண்டும் கொண்டுவர காங்கிரஸ் விரும்புகிறது.
மத அடிப்படையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க நினைப்பது ஆபத்தான யோசனை. நாட்டு மக்கள் அனைவருக்கும் நலத் திட்டப் பலன்கள் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். ஆனால், மத அடிப்படையில் நாட்டைப் பிரிக்கும் வேலையில் காங்கிரஸ் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது.
அரசமைப்புச் சட்டத்தின் தலைமைச் சிற்பியான பி.ஆா்.அம்பேத்கா், கல்வி-வேலைவாய்ப்பில் மத ரீதியிலான இடஒதுக்கீட்டை உறுதியாக எதிா்த்தாா். இடஒதுக்கீடாக இருந்தாலும், பட்ஜெட்டாக இருந்தாலும் மத அடிப்படையில் பிரிக்கப்பட ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் கருத்தை கடுமையாக சாடியுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்,
பிரதமரின் பேச்சுகள் மற்றும் அறிக்கைகள் வினோதமானவை மற்றும் அவருக்கு உரை எழுதி கொடுப்பவர்கள் சமநிலையை இழந்துவிட்டனர் என்பதைக் காட்டுகின்றன” என்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? – ப.சிதம்பரம் கேள்வி
இந்து-இஸ்லாமியர்களிடையே பிரிவினையை தூண்டுபவன் பொதுவாழ்க்கையில் இருக்கத் தகுதியற்றவன் என்று செவ்வாய்கிழமை கூறிய பிரதமர், அடுத்த நாளே, “இந்து- இஸ்லாமியர்களை பிரிக்கும் தனது வழக்கமான விளையாட்டை விளையாடியுள்ளார்” என்று சிதம்பரம் கூறினார்.
அதாவது, “மத்திய நிதிநிலை அறிக்கையில் 15 சதவீதத்தை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே செலவிட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திட்டம் தீட்டியது என்ற மோடியின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.
காங்கிரஸ் ஒரு இஸ்லாமிய நிதிநிலை அறிக்கையும், இந்து நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யும் என்ற அவரது குற்றச்சாட்டு மிகவும் மூர்க்கத்தனமானது, அது ஒரு மாயத்தோற்றம்” என்று சிதம்பரம் கூறினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 112 ஆவது பிரிவு ஒரே ஒரு வருடாந்திர நிதிநிலை அறிக்கையை மட்டுமே சிந்திக்கிறது, அதுதான் மத்திய நிதிநிலை அறிக்கை. இதில் இரண்டு நிதிநிலை அறிக்கைகள் எப்படி இருக்க முடியும்? என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
“தேர்தல் பிரசாரத்தின் மீதமுள்ள நாள்களில், பிரதமர் மோடி தவறான குற்றச்சாட்டுகள் மற்றும் மூர்க்கத்தனமான பேச்சுகளின் பாதையில் இருந்து விலகுவார் என்பது எனது முழுமையான நம்பிக்கை,” என்று அவர் கூறினார்.
பிரதமரின் அறிக்கைகள் நாட்டு மக்களை மட்டுமல்ல, உலகமே உற்றுப் பார்த்தும், பகுப்பாய்வு செய்தும், இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கவில்லை என்றும் சிதம்பரம் கூறினார்.
