Sorting by

×

“தி.மு.க ஆட்சியில் கூட்டணி கட்சியின் மாவட்ட தலைவர் மரணித்திருக்கிறார்… இச்சம்பவத்தில் எதிர்க்கட்சி தலைவர் அறிவிக்கை கொடுத்துவிட்டு மெளனமாகிவிட்டாரே.!”

“சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டுமென தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே சுட்டிக் காட்டுகிறார் எடப்பாடியார். மாறாக சட்டம் ஒழுங்கை சீரழிப்பதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிவிட்டது தி.மு.க என்பதற்கு இதனைவிட தகுந்த உதாரணம் சொல்ல முடியாது. தமிழ்நாடு காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டால் ஒரேநாளில் குற்றவாளியை கண்டுபிடிக்கும் ஆற்றலும் அனுபவம் கொண்டிருக்கிறது. காவல்துறையை சுதந்திரமாக செயல்பட தொடர்ந்து இடையூறுகள் இருந்தால் அடுத்த கட்டம் சி.பி.ஐ வசம் வழக்கு மாற்றப்பட வேண்டும் என கோரிக்கை எழும்.”

மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்

“நாடாளுமன்ற தேர்தலில் இராமநாதபுரம் பொறுப்பாளராக பணியாற்றினீர்கள்… ஓ.பி.எஸ் போட்டியாக மேலும் 5 ஓ.பி.எஸ் பெயர் கொண்டவர்களை வேட்பாளராக நிறுத்தியது நீங்கள்தானே!”

“ஓ.பி.எஸ் பெயர் கொண்டவர் தேர்தல் போட்டியிடுவதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? இந்த குற்றசாட்டி எந்த அடிப்படையும் இல்லை. ஒரே பெயர் கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாதென்ற மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது நீதிமன்றம். ஓ.பி.எஸ் பொறுத்தவரை அவர் ஒரு சுயேட்சை வேட்பாளர். அவர் தோற்கடிக்க நாங்கள் வியூகம் அமைத்தோம் என்பதெல்லாம் பொய்.”

“அதேபோல், டிடிவி தினகரனையும் தோற்றகடிப்பதிலேயே குறியாக இருந்ததாக சொல்லப்படுகிறதே..?”

ஒ பன்னீர் செல்வம்

“தினகரன், பன்னீர் இருவருமே சுயேட்சை வேட்பாளர்கள் தானே… அவர்களெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டேயில்லை. தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் தான் போட்டி. இரண்டு தனிநபர்களை குறிப்பிட்டு அப்படி செய்வார்கள் இப்படி செய்வார்கள் எனப் கற்பனையில் வண்டி ஓட்டுவது பற்றி எங்களுக்கு கவலையில்லை.”

டிடிவி தினகரன்

“கூட்டணி தர்மத்துக்காக பா.ஜ.க-வின் எல்லாச் சட்டங்களையும் திட்டங்களையும் ஆதரித்து, அண்ணா திமுகவை அமித்ஷா திமுகவாக மாற்றி மாற்றி விட்டு… மாநில உரிமைகள் குறித்து எடப்பாடி பேசுவதாக தி.மு.க-வின் ஆர்.எஸ் பாரதி கேட்கிறாரே!”

ஸ்டாலின், மோடி

“மாநில உரிமையை பேசுகிறபோது, கூட்டணி தர்மத்துக்காக உரிய அழுத்தங்களை தரமுடியாத சூழல் கடந்தகாலங்களில் ஏற்பட்டது. மத்தியில் யாரையும் சார்ந்திருக்காதபோது தனித்தன்மையுடன் துணிவுடன் மாநில உரிமைக்காக போராடலாம் என்பதால் இம்முடிவெடுத்தோம், அப்படி கூட்டணியில் இருந்தபோதும் 22 நாள்கள் நாடாளுமன்றத்தை முடக்கி காவிரி ஆணையம் அமைத்தோம். தி.மு.க 38 எம்.பிக்கள் வைத்து செய்த ஒரு காரியத்தை சொல்லுங்களேன். நீட் விலக்கு பெற்றார்களா.. பேரிடர் நிவாரண நிதி 38,000 கோடியை பெற்றுவிட்டார்களா.. இதற்கிடையில் மோடியை அழைத்துவந்து விளையாட்டு விழா நடத்துங்கள் என யார் அழுதது.. புறக்கணித்திருக்க தைரியம் இருந்ததா? மேடையில் மோடியும் ஸ்டாலினும் கொஞ்சிக் குளாவிக் கொண்டிருந்ததை பார்த்தோமே.. வெள்ளைக் கொடையுடன் வரவேற்கிற போது `கோ பேக் மோடி’ என்றெல்லாம் பேசுவதில்லை ஏன்.. அப்படியென்றால் எதிர்க்கட்சியென்றால் எதிர்ப்பது.. ஆட்சிக்கு வந்தால் சிவப்பு கம்பளம் விரிப்பதா.? இதற்கு மத்தியில் எங்களை விமர்சிப்பதெல்லாம் சிரிக்கத்தான் தோன்றுகிறது.!”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

பூத் ஏஜென்ட்கூட இல்லாத கட்சிதான் தி.மு.க-வுக்கு எதிரியா? – ஆர்.பி.உதயகுமார் கிண்டல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *