சென்னை: “யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதையோ, அதன் வாழ்விடத்தைப் பாதுகாப்பதிலோ எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், யானைகள் வாழுமிடம் மற்றும் வழித்தடம் எதுவென்பதே அறியாமல் தமிழ்நாடு வனத்துறை கூடலூர் மக்களை ஆக்கிரமிப்பாளர்களாகக் காட்டி அவர்களை வெளியேற்ற யானை வழித்தடத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த முயல்வது வெட்கக்கேடானது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டம், கூடலூரில் வனத்துறை மூலம் தமிழக அரசு அவசரகதியில் வெளியிட்டுள்ள யானை வழித்தட பாதுகாப்பு மாதிரி வரைவு அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. யானைகளின் உண்மையான வழித்தடத்தை அறியாமல், கருத்துக்கேட்புக் கூட்டங்களும் நடத்தாமல், மக்களை வெளியேற்றும் ஒற்றை நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ள வரைவு அறிக்கை வன்மையான கண்டனத்துக்குரியது
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
