சென்னை: சட்ட விதிகளை மீறி, பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூடியூபர் இர்ஃபான் விவகாரத்தில் என்ன செய்யலாம் என்று மத்திய அரசிடம் வழிகாட்டுதல்களை தமிழக அரசு கேட்டுள்ளது.
பிரபல யூடியூபர் இர்ஃபான் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மனைவி கர்ப்பமாக இருந்ததால், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்ள துபாய் சென்று அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்து தெரிந்து கொண்டார். இந்நிலையில், கடந்த 19-ம் தேதி, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்து தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை இர்ஃபான் வெளியிட்டார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
