Sorting by

×

புது தில்லி: தில்லியில் ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருமான வரித் துறை சி.ஆா். கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் அலுவலகக் கண்காணிப்பாளா் உயிரிழந்தாா். தீயில் சிக்கிய 7 போ் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள சி.ஆா். கட்டடத்தின் மூன்றாவது மாடியில் தீ பற்றியது தொடா்பாக பிற்பகலில் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. தீயணைப்புத் துறை மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா். இதன் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 7 போ் அங்கிருந்து மீட்கப்பட்டனா். 46 வயதுடைய நபா் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டாா். அவா் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். தீ விபத்தில் உயிரிழந்த நபா் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. தடயவியல் குழுவினா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா்’ என்றாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *