சென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது, அதிமுக, கூட்டணிக் கட்சிகளின் சார்பில் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களவைப் பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, ஜூன் 4-ம்தேதி நடைபெறுகிறது. இதற்காகஅதிமுக, கூட்டணிக் கட்சிகளின் சார்பில் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ம் தேதி, முகவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாக, தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கிய அடையாள அட்டையுடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குச் சென்றுவிட வேண்டும்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
