உத்தர பிரதேசம் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். இத்தொகுதியில் அவர் 3-வது முறையாக போட்டியிடுகிறார்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மும்பையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: இதற்கு முன்பும் நாம் பிரதமரின் தொகுதிகளை பார்த்திருக்கிறோம். வாராணசி நகரம் முற்றிலும் மாறிவிட்டது என அப்பகுதி மக்கள் தற்போது பெருமிதத்துடன் கூற முடியும். பிரதமர் மோடி தனது தொகுதியில் செய்ய வேண்டிய பணிகளை உண்மையாக செய்திருக்கிறார். பிரதமரால் தனது தொகுதிக்கு என்ன செய்ய முடியும் என்பதை அவர் காட்டியுள்ளார்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
