Sorting by

×

தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. தொகுதிப் பங்கீடு குறித்த முடிவுகள் கிட்டத்தட்ட இறுதி நிலையை எட்டியுள்ளன. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும். மாநிலத் தலைவர் என்ற முறையிலும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர் என்ற முறையிலும் நான் இதுவரை நடிகர் விஜய்யிடமோ அல்லது அவரது தரப்பினரிடமோ எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

நயினார் நாகேந்திரன்

யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. அப்படியிருக்கையில் இத்தகைய செய்திகள் எங்கிருந்து வருகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு தவறான தகவல்.  அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவை சுதந்திரமான அமைப்புகள். தவறு செய்தவர்கள் மீது மட்டுமே அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். இதற்கும் பா.ஜ.கவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பல அமைச்சர்கள் மீது 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்பே வழக்குகள் உள்ளன.

எனவே இதனைத் தேர்தல் நடவடிக்கையாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. பா.ஜ.க எந்த ஒரு சாதியையோ அல்லது மதத்தையோ சார்ந்த கட்சி கிடையாது. நாங்கள் அனைத்து மதத்தினரையும் சமமாகவே நடத்துகிறோம். இஸ்லாமியர்களின் நோன்புத் திறப்பு நிகழ்வுகளில்கூட நான் கலந்துகொள்கிறேன்.

நயினார் நாகேந்திரன்

உண்மையில் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராகப் பேசுவது தி.மு.க.,தான். இந்து மதப் பண்டிகைகளுக்கு அவர்கள் வாழ்த்துச் சொல்வதில்லை, ஆனால், மற்ற பண்டிகைகளுக்குச் சொல்கிறார்கள். தேர்தல் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிக விரைவில் வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை குறித்த அறிவிப்புகள் வெளியாகும்” என்றார்.  

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *