சென்னை: மும்பையில் புழுதிப் புயலால் விளம்பரப் பலகை விழுந்து 16 பேர் உயிரிழந்த நிலையில், சென்னையில் விதிகளை மீறி வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்ற மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், அதன் தாக்கத்தால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் சில தினங்களுக்கு முன்பாக அதிகாலையில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
