விழுப்புரம்: விழுப்புரம் அருகே குடிநீர் கிணற்றில் யாரோ மர்ம நபர்கள் மனிதக் கழிவை கலந்துள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் அங்கு உரிய ஆய்வு செய்ய உத்தரவிட்ட அதிகாரிகள் கிணற்றில் விழுந்து கிடந்தது வெறும் தேன் அடை என்பதை உறுதிப் படுத்தியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதிக்கு உட்பட்ட கஞ்சனூரை அடுத்த கிராமம் கேஆர் பாளையம். இக்கிராமத்தில் பொதுமக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் பொதுக் கிணற்றில் நேற்று (செவ்வாய்) இரவு யாரோ மர்ம நபர்கள் மனிதக் கழிவை கலந்ததாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இக்கிணற்று நீரை சுமார் 200 குடும்பத்தினர் குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தி வந்த நிலையில் இந்நிகழ்வு அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த மக்கள் புகாரை ஏற்று கஞ்சனூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
