திருப்போரூர்: திருப்போரூர் பிரணவ மலை செல்லும் வழியில், வள்ளலார் சிந்தனை சீடர் பாலசுப்ரமணி (89) என்பவர் ஆசிரமம் அமைத்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக சன்மார்க்க தொண்டாற்றி வந்தார்.
வள்ளலார் கொள்கைகளை பரப்பிய மூத்த சன்மார்க்கி யான தன்னை, வேலைக்கார சுவாமிகள் என்று அழைக்கும்படி தன் சார்ந்தவர்களை இவர்கேட்டுக் கொண்டார். அதாவதுவள்ளலாரின் வேலைக்காரன் என,தன்னை அவர் அடையாளப் படுத்திக் கொண்டார். பல ஆண்டுகளாக உணவு உண்ணாமல் வெறும் தண்ணீர் மட்டுமே பருகி சன்மார்க்கத் தொண்டாற்றியவர் வேலைக்கார சுவாமிகள் ஆவார்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
