Sorting by

×

நாடாளுமன்றத் தேர்தல் நான்காம் கட்ட வாக்குப்பதிவு ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசம் என 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று காலைமுதல் நடைபெற்று வருகிறது. இதோடு, ஆந்திரா மற்றும் ஒடிசாவில் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி போட்டியிடும் ஹைதராபாத் தொகுதியில் வாக்குச்சாவடியொன்றில் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா, வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதாகக் கூறி இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் புர்காவை விலக்கச் சொல்லி வாக்காளர் அட்டையைச் சரிபார்த்த சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.

மாதவி லதா – ஒவைசி

இந்த சம்பவமானது அசாம்பூரில் உள்ள வாக்குச்சாவடி மையம் 122-ல் நடந்திருக்கிறது. காலையில் இந்த வாக்குச்சாவடியை பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பார்வையிட வந்தார். அப்போது திடீரென அங்கிருந்த இஸ்லாமிய பெண்களிடம் புர்காவை விலக்கி முகத்தைக் காண்பிக்கச் சொல்லி அவர்களின் வாக்காளர் அட்டைகளை வாங்கிச் சரிபார்த்தார். அப்போது, அந்த வாக்குச்சாவடி மையத்தின் தேர்தல் அதிகாரிகள் யாரும் அவரை தடுத்து நிறுத்தக்கூட இல்லை.

பின்னர் ஊடகத்திடம் பேசிய மாதவி லதா, “போலீஸார் மிகவும் மந்தமாக இருக்கிறார்கள். எதையுமே சரிபார்க்கவில்லை. வயதான வாக்காளர்கள் இங்கு வருகிறார்கள். ஆனால், அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், கோஷாமஹாலைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் ரங்காரெட்டி பகுதி வாக்காளர் பட்டியலில் இருக்கிறது” என்று கூறினார்.

#WATCH | Telangana: BJP candidate from Hyderabad Lok Sabha constituency, Madhavi Latha visits a polling booth in the constituency. Voting for the fourth phase of #LokSabhaElections2024 is underway. pic.twitter.com/BlsQXRn80C

— ANI (@ANI) May 13, 2024

இப்படியிருக்க, இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் புர்காவை விலக்கச் சொல்லி வாக்காளர் அட்டையை மாதவி லதா சரிபார்க்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில், மாதவி லதாவின் செயல் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்திருக்கும் தெலங்கானா முதல்வர் ரேவந் ரெட்டி, “பாஜக வெறுமனே இஸ்லாமிய வாக்குகளைப் பிரித்து வெற்றிபெற முயற்சிக்கிறது. ஆனால், பா.ஜ.க வேட்பாளரின் இந்த செயல் ஒவைசிக்குதான் உதவும். இதுபோன்ற செயல் பா.ஜ.க-வுக்கு உதவாது” என்று கூறினார்.

ஒவைசி

1989 முதல் AIMIM கட்சியின் கோட்டையாக இருக்கும் இந்த ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் 1989 முதல் 1999 வரை ஒவைசியின் தந்தை சுல்தான் சலாஹுதீன் ஒவைசியும், 2004 முதல் 2019 வரை அசாதுதீன் ஒவைசியும் எம்.பி-க்களாக வெற்றி பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது நடந்துகொண்டிருக்கும் தேர்தலில் இந்தத் தொகுதியில் காங்கிரஸிலிருந்து முகமது வலியுல்லாஹ் சமீர் என்பவரும், பி.ஆர்.எஸ் சார்பில் ஸ்ரீனிவாஸ் யாதவ் என்பவரும் போட்டியிடுகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

தெலங்கானா: `சட்டசபை தேர்தலை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலிலும் முந்துமா காங்கிரஸ்?’ – களநிலவரம் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *