மதுரை: “கடந்த 3 ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கென அமைச்சர் உதயநிதி எத்தனை செங்கலை வைத்துள்ளார்?” என, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் 70-வது பிறந்தநாளையொட்டி, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றிய அதிமுக சார்பில் செல்லம்பட்டியில் அன்னதானம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை வகித்தார். எதிர்க்கட்சி துணைத் தலைவர், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம அவர் கூறியது: “கட்டுமான தொழிலாளர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு கட்டுமான நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அரசு வெளியிட்டுள்ளது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
