Sorting by

×

ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் நான்காம் கட்ட மக்களவை தோ்தலுக்கான வாக்குப் பதிவு இன்று(மே. 13) நடைபெற்று முடிந்துள்ளது.

மக்களவை தேர்தலுக்கான 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

மக்களவை தேர்தலுக்கான 4-ஆம் கட்ட வாக்குப்பதிவில், மாலை 5 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 75.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆந்திர பிரதேசத்தில் 68.04 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 68.01 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் மக்களவை தொகுதியில் 35.75 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மக்களவை தேர்தலுக்கான 4-ஆம் கட்ட வாக்குப்பதிவில், ஒட்டுமொத்தமாக 96 தொகுதிகளில் 62.84 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. துல்லியமான வாக்குப்பதிவு சதவீத விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *