Sorting by

×

கோவை வடக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசன், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே நேற்று தேர்தல் பரப்புரையின் இடையே வானதி சீனிவாசனுக்கு திடீரென கால் வீக்கம் ஏற்பட்டது. இதனால் அவநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 48 மணி நேரம் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினர். இதனால் வேட்பாளர் வானதி சீனிவாசன் இல்லாமலே, தொகுதிக்குள் பா.ஜ.க.வினர் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே வானதி சீனிவாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது, “வானதி சீனிவாசனுக்கு வலது காலில் ஏற்பட்ட லேசான தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மற்றும் பிற ஆதரவு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது, அவர் எடுத்த மருந்துகளில் ஒன்றினால் லேசான அலர்ஜி ஏற்பட்டது. இதன் காரணமாக கண்காணிப்பிற்காக ஐசியூ பிரிவிற்கு மாற்றப்பட்டார்.” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *