மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் ஈரானின் முக்கியத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
நேற்று நடைபெற்ற தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதை ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ஆயதுல்லா அலி கமேனியைக் கொன்றது முஸ்லிம்களுக்கு எதிரான திறந்த போர் அறிவிப்பு என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் தெரிவித்துள்ளார்.
ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியான அறிக்கையில் அவர் கூறியதாவது, “இஸ்லாமியக் குடியரசின் உயர்ந்த அரசியல் அதிகாரி மற்றும் உலக அளவில் ஷியா இஸ்லாமின் முக்கிய தலைவரின் கொலை, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு, குறிப்பாக ஷியாக்களுக்கு எதிரான திறந்த போர் அறிவிப்பாகக் கருதப்படுகிறது.

கமேனியின் கொலைக்குப் பழிவாங்குவது கடமை ஆகும்.
இந்த வரலாற்றுக் குற்றத்தின் நிர்வாகிகள் மற்றும் திட்டமிட்டவர்களைப் பழிவாங்குவது ஈரானின் சட்டபூர்வமான கடமையும் உரிமையும் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
