Sorting by

×

நரவானே புத்தக விவகாரம்: “யார் பொய் சொல்கிறார்கள்?” – ராகுல் காந்தி கேள்வி!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இந்த நிலையில், முன்னாள் ராணுவத் தளபதி நரவானேவின் சுயசரிதை ‘Four Stars of Destiny’ நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த புத்தகத்தை முன்வைத்து ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளும், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இதற்கிடையில், ராகுல் காந்தி, இன்னும் வெளியிடப்படாத ‘Four Stars of Destiny’ புத்தகத்தை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவந்தார். இந்த நிலையில், இந்தப் புத்தகத்தின் உரிமையை வைத்திருக்கும் பெங்குயின் பதிப்பகம், “தற்போது புழக்கத்தில் […]

TNPSC: நிரப்பப்படாத பதவிகள், ஆளுநர்; அரசு மோதல் – சரி செய்யப்பட வேண்டியது தேர்வாணையம்தான்!

கடந்த ஞாயிற்றுக் கிழமை டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் 2 தேர்வு ரத்தானது அல்லவா? தேர்வாணைய வரலாற்றிலேயே தேர்வு நாள் அன்று காலையில் தேர்வு ரத்தாவது இதுதான் முதல் முறை. ‘தொழில்நுட்பக் கோளாறு, தவறுக்கு வருந்துகிறோம்’ என ஒற்றை வார்த்தையில் கடந்து விட்டது தேர்வாணையம். ‘வருடக் கணக்கில் கடுமையாக முயற்சி செய்த லட்சக்கணக்கான மாணவர்களின் உழைப்பு இல்லையா, இவ்வளவு அலட்சியமாகவா இருப்பார்கள்’ என எழுந்த சந்தேகத்துடன் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், அவர்களுக்குப் பயிற்சி தரும் மையங்கள், தேர்வாணையத்துடன் தொடர்பிலிருந்த […]

`நாங்கள் தயார், திமுக தயாரா? குழு அமைக்காதது வருத்தமே!’ – டெல்லியில் செல்வப்பெருந்தகை பேட்டி

டெல்லியில் இன்று (பிப்.10) காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருக்கின்றனர். ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “ தொகுதி பங்கீடு குறித்து பேச முதல்வர் ஸ்டாலின் உடனே குழுவை அமைக்க வேண்டும். விரைவில் தேர்தல் உடன்பாட்டை முடிக்க வேண்டும். பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு போன்றவற்றை செய்ய எங்களுக்கு உரிய நேரம் தேவை. கடைசி நேரத்தில் அறிவித்தால் […]

பாஜக: “எனக்கும் கேசவ விநாயகத்துக்கும் என்ன கருத்துவேறுபாடு?” – அண்ணாமலை ஒப்பன் டாக்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக பா.ஜ.க-வில் மிகப்பெரிய நிர்வாக ரீதியான மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக தமிழக பா.ஜ.க-வின் ‘அமைப்புப் பொதுச்செயலாளர்’ என்ற அதிகாரமிக்க பதவியில் இருந்த கேசவ விநாயகம், அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவர் மீண்டும் ஆர்.எஸ்.எஸ் பணிக்கே திரும்பியிருக்கிறார். தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கும், கேசவ விநாயகம் தரப்புக்கும் இடையே நீண்ட காலமாக ‘நிழல் யுத்தம்’ நடந்து வந்ததாக பேசப்பட்டது. குறிப்பாக, அண்ணாமலை தரப்பினர் கேசவ விநாயகத்தின் […]

`டி.என்.பி.எஸ்.சி.யில் அரசியல் தலையீடா?’ – முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் என்ன சொல்கிறார்?

கடந்த ஞாயிற்றுக் கிழமை டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டிருந்த குரூப் 2 தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்ட‌ நிலையில், தேர்வாணையத்தின் முன்னாள் தலைவரும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான நடராஜிடம் பேசினோம். ”முதல்ல ஜூன் ஜூலையில் தான் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு வந்தது. நான் தலைவரா ஆனதுமே அதை ஜனவரிக்கு மாத்தினேன். தேர்வு அட்டவணை பக்காவா போட்டு நடத்தறதுல யு.பி.எஸ்.சி அவ்வளவு பர்ஃபெக்ட். அப்பப்ப யு.பி.எஸ்.சி யில இருந்து மாநில தேர்வாணையங்களை அழைத்து மீட்டிங் […]

`காகிதத்தில் மட்டுமே முதலீடு; பெண்கள் பாதுகாப்பு புறக்கணிப்பு’ ஆளுநர் வெளியேறியது ஏன்? | முழு விவரம்

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வந்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற மூன்று ஆண்டுகளில், இதுவரை ஒரு ஆண்டு கூட, அவர் ஆளுநர் உரையை முழுமையாகப் படித்ததில்லை. இதனால் இந்த முறையும் ஆளுநர் உரை மீது எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் தமிழ்நாடு கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, […]

‘பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2

கடந்த காலங்களில், கட்சிகளெல்லாம் கூட்டணிக்காக அடித்த அந்தர் பல்டிகளையும் மனசாட்சியே இல்லாமல் கம்பு சுற்றிய சம்பவங்களையும் ரீவைண்ட் செய்து பார்த்தால் செம ரகளையாக இருக்கும். அதற்காகவே ஸ்பெசலாக வருகிறது ‘கூட்டணி சர்க்கஸ்’ – கட்சிகளின் கூட்டணி கலாட்டாக்கள்!’ வைகோ‘கூட்டணி சர்க்கஸ்’ – பகுதி 02 ‘கலைஞர் அவர்களே! உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எம்.ஜி.ஆர் சொன்னார். மக்கள் நம்பினார்கள். தூக்கியெறிந்தார்கள். இப்போது மீண்டும் உங்கள் மீது நான் குற்றச்சாட்டு சொல்கிறேன். லட்சோப லட்சம் தொண்டர்களின் கண்ணீரில், ரத்தத்தில் கிடைத்த ஆஸ்திகளை […]

‘மைக் off செய்யப்பட்டது; பேச அனுமதிக்கவில்லை’ – ஆளுநர் மாளிகை| சட்டமன்றக் கூட்டத்தொடர் 2026 LIVE

ஆளுநர் மாளிகை என்ன சொல்கிறது? ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை கூறியுள்ளதாவது…. “ஆளுநரின் மைக் தொடர்ந்து ஆஃப் செய்யப்பட்டது. அவர் பேச அனுமதிக்கப்படவில்லை. ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான பல தவறுகள் இடம்பெற்றிருக்கின்றன”. Reasons why Governor declined reading the Govt speech in the Assembly: 1- Governor’s Mike was repeatedly switched off and he was not allowed to speak; 2- The speech contains […]

டெல்லி குடியரசு தின விழா: விவிஐபியாகப் பங்கேற்கும் தேனி பளியர் பழங்குடியினத் தம்பதி; காரணம் என்ன?

இந்திய நாட்டின் 77-ஆவது குடியரசு தின விழா டெல்லியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவின் போது சிறப்பு அழைப்பாளர்களாக பழங்குடியினரை அழைத்து அவர்களைக் கெளவரப்படுத்து வருகிறது மத்திய அரசு. அந்த வகையில், தேனி மாவட்டம் சேர்ந்த பளியர் பழங்குடியினத் தலைவர் கண்ணன் மற்றும் அவரது மனைவி கனகா ஆகியோரை விவிஜபி பிரிவின் கீழ் முதன்மை சிறப்பு அழைப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 25 ஆண்டு கால சமூக பணி பெரியகுளம் அருகே உள்ள சொக்கன் அலை […]