கோவையில் கனமழையால் ரயில்வே பாலத்தில் தேங்கிய நீரால் வாகனஓட்டிகள் சிரமமடைந்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய வெள்ளத்தால் நோயாளிகள் சிரமமடைந்தனர். இந்நிலையில், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
