தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மதுரை தெற்கு தொகுதியில் திரைப்பட பைனான்சியர் அன்புசெழியனின் மகன் விவேக் போட்டியிடுவதாக சொல்லபட்டது. திடீரென விவேக் போட்டியிடுவதில் இருந்து விலகி விடவே தவெக கட்சி நிர்வாகி ஜோ.பீட்டர் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தொகுதியில் அறிமுகம் இல்லாத நபர் அதோடு மதுரை தெற்கு தொகுதியில் செள்ராஷ்டிரா சமூக மக்களின் வாக்குகள் அதிகம் என்பதால் அந்த சமூகத்தை சேர்ந்தவரை வேட்பாளராக அற்விக்க வேண்டுமென தவெக தலைமைக்கு அக்கட்சியினர் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று திடீரென ஜோ.பீட்டர் மாற்றபட்டு அவருக்கு பதிலாக கோபின்சன் என்பவர் வேட்பாளராக அறிவித்திருப்பதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுதாக்கல் செய்திருக்கிறார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
