தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
சேலம், சீலநாயக்கன்பட்டியில் இன்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது. திறந்தவெளி பொதுக் கூட்டமாக நடைபெறும் இதில் 5,000 பேர் பங்கேற்று இருந்தனர்.
இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற சுராஜ் (35) என்ற நபர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றபோது சுராஜ் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கிறார்.
பிறகு தவெக கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி அளிக்கப்பட்டிருக்கிறது.
பிறகு சுராஜ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். உயிரிழந்தவர் மஹாராஷ்டிராவைப் பூர்விகமாகக் கொண்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக சேலம் பகுதியில் பட்டறையில் பணிபுரிந்து வந்த அவர், இன்று விஜய் சந்திப்புக் கூட்டத்துக்குச் சென்ற இடத்தில், இத்தகைய அசம்பாவிதம் நடந்திருப்பது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
