அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளைப் பழிவாங்க, ஈரான் மத்திய கிழக்கு நாடுகளின் மீதுதான் தாக்குதல் நடத்தி வருகிறது.
அப்படி ஈரான் தாக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் முக்கியமான ஒன்று.
ஆனால், ஈரான் தங்களைத் தாக்குவதற்கு இதுவரை எந்தப் பதிலடிகளையும் இந்த மத்திய கிழக்கு நாடுகள் கொடுக்கவில்லை.
ஒருவேளை, அமீரகம் பதிலடி கொடுத்தாலும், அது அந்த நாட்டிற்கு தான் ஆபத்து என்று அமெரிக்காவின் மிக முக்கியமான பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கூறுகிறார்.

என்ன சொல்கிறார்?
“ஐக்கிய அரபு அமீரகம் ஈரான் போருக்குச் சென்றால் துபாயும், அபுதாபியும் பெரிய அடியைச் சந்திக்கும்.
காரணம், இந்த இரு நாடுகளும் சுற்றுலா தளங்கள். அங்கே ஏவுகணை பாதுகாப்பு பகுதிகள் இல்லை.
அது பணக்காரர்கள் பார்ட்டிக்குச் சென்று, அதிக பணம் போடும் நகரங்கள்.
அதனால், அவர்கள் போருக்குச் சென்றால் கண்ணைத் திறந்துகொண்டே குழியில் விழுவதுபோல ஆகும். மேலும், அது இப்போதிருக்கும் பிரச்னையை இரட்டிப்பாக்கும்.
ஆப்ரஹாம் ஒப்பந்தத்தின் படி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு ஆதரவாக அமீரகம் போரில் இறங்குவது பிரச்னையை விலை கொடுத்து வாங்குவது போல.
அமெரிக்காவிற்கு நண்பராக இருப்பது பேராபத்து
இந்த வளைகுடா நாடுகள் தங்களது பாதுகாப்பிற்கு அமெரிக்காவை நம்பி இருக்கின்றன. இது தவறான கணக்கு ஆகும்.
கிஸ்ஸிஞ்சரின் பிரபலமான பழமொழியை நான் அடிக்கடி கூறுகிறேன்… “அமெரிக்காவின் எதிரியாக இருப்பது ஆபத்து. ஆனால், அதை விட, அமெரிக்காவின் நண்பராக இருப்பது பேராபத்து”.
ஈரானை எதிர்க்க டிரில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்காவில் கண்மூடித்தனமாக கொட்டி வந்தனர்.
அது போதும். சூழலை புரிந்துகொண்டு இனி நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்”.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
