கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12), ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் உள்நுழையவும், வெளியே போகவும் முடியாதவாறு அமெரிக்கா தடுக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, அமெரிக்க நேரப்படி, திங்கட்கிழமை (ஏப்ரல் 13) காலை 10 மணி முதல், ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டது அமெரிக்கா கப்பற்படை.
இந்தச் சூழலில், சீனாவின் கப்பல் ஒன்று ஹார்முஸ் ஜலசந்தியில் இப்போது பயணித்து வருகிறது. அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தியை அடைத்த பிறகு, கப்பல் ஒன்று அந்தப் பாதையில் பயணிப்பது இதுவே முதன்முறை.

அமெரிக்கா தடை விதித்த கப்பல்
சீனாவின் இந்தக் கப்பல் பெயர் ரிச் ஸ்டாரி. டெஹ்ரானின் எரிசக்தியை தொடர்ந்து ஈரானில் இருந்து சீனாவிற்கு கொண்டு சென்றதால், 2023-ம் ஆண்டு இந்தக் கப்பலுக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது.
ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கிறது மட்டுமில்லாமல், அமெரிக்கா தடை விதித்த கப்பல் என்பதால், இந்தக் கப்பலின் பயணம் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்தக் கப்பல் ஈரான் துறைமுகத்திற்குச் சென்றதா… அல்லது சரக்குகளை கொண்டு பயணித்ததா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
எப்படி பத்திரமாக வந்தது?
அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தி மூடல் அறிவிப்பை அறிவிப்பதற்கு முன், இந்தக் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்துக் கொண்டிருந்திருக்கிறது.
தடை அறிவிப்பு வந்ததும், மீண்டும் அது யு-டர்ன் போட்டு ஹார்முஸ் ஜலசந்திக்கு எந்த வழியாக உள்நுழைந்ததோ, அங்கேயே திரும்பி சென்றுள்ளது.
அங்கே, இந்தக் கப்பல் சீனாவிடனுடையது என்று அறிவித்த பின்னர், பத்திரமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மீண்டும் பயணித்து வருகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
